மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கிவிட்டோம் - பாசிச பாஜகவை விரட்டுவோம் மாணவர்களே..! அமைச்சர் உதயநிதி...!
நீட் தேர்வு - தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா"என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உதயநிதி பதிவு
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் - இடதுசாரி - சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை & நீட் தேர்வுக்கு எதிராகவும், பாசிச பாஜகவை மக்களவைத் தேர்தலில் வீழ்த்தவும்,
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட "சென்னைப் பேரணி"யை, கழகம் தொடங்கப்பட்ட ராயபுரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து இன்று தொடங்கி வைத்தோம்.
இந்திய ஒன்றிய மாணவர்களின் உரிமைகளை காக்க, தி.மு.கழகம் - இடதுசாரி - சிறுபான்மையினர் இயக்கங்கள் உள்ளிட்டவற்றின் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து "யுனைடெட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா" எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
— Udhay (@Udhaystalin) February 1, 2024
இந்தக் கூட்டமைப்பு சார்பில், தேசியக் கல்விக் கொள்கை & நீட்… pic.twitter.com/UXuiWOc9Gq
தேசிய கல்விக் கொள்கை - நீட் - இட ஒதுக்கீடு பறிப்பு- இந்தி மொழித் திணிப்பு போன்ற பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம். INDIA கூட்டணியை வெல்லச் செய்வோம் என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினோம் என்று பதிவிட்டுள்ளார்.