தனிமையில் இருந்த ஜோடி: பெவிக்குவிக்கை ஊற்றி கொடூரமாக கொன்ற சாமியார்!

Attempted Murder Rajasthan Crime
By Sumathi Nov 24, 2022 05:24 AM GMT
Report

கள்ளக்காதல் ஜோடியை, சாமியார் பெவிக்குவிக்கை ஊற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

ராஜஸ்தான், மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் உடல் சடலமாகக் கிடந்துள்ளன. மேலும், கொடூரமாக ஆண் உறுப்பு வெட்டப்பட்டும், பெண் உறுப்பில் காயமும் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக மீட்கப்பட்டது சோனு சிங்(28), மற்றும் ராகுல் மீனா(30) என்பது தெரியவந்தது.

தனிமையில் இருந்த ஜோடி: பெவிக்குவிக்கை ஊற்றி கொடூரமாக கொன்ற சாமியார்! | Udaipur Tantrik Brutally Killed Couples

மேலும், சாமியாரான பாலீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பாதவிகுடா பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சாமியாராக உள்ளார். அங்கு ராகுலும் சோனும் அவ்வப்போது வந்த சென்று பழகியதில் அது தகாத உறவாக மாறியுள்ளது.

சாமியார் கொடூரம்

இதனால் சோனு வீட்டில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். உடனே ராகுலின் மனைவி சாமியாரை தேடிச் சென்றுள்ளார். இதற்கிடையில், சாமியாருக்கு ராகுலுக்கும் சோனுவுக்கும் இருக்கும் கள்ளக்காதல் தெரியவந்தது.

தனிமையில் இருந்த ஜோடி: பெவிக்குவிக்கை ஊற்றி கொடூரமாக கொன்ற சாமியார்! | Udaipur Tantrik Brutally Killed Couples

எனவே, தன் தொழிலுக்கு கெட்ட பெயர் ஆகிவிடும் என்று இருவரையும் பிரிந்து விடச் சொல்லி கேட்டுள்ளார். ஆனால், இந்த ஜோடி பிரிய மறுத்துள்ளனர். அதனால் சாமியார் அவர்களை கொல்ல முடிவு செய்துள்ளார்.

அதன்பின், குல் -சோனுவை அழைத்து எந்த சூழலிலும் நீங்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த சூழலில் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதனை நம்பி இருந்த ஜோடியின் மீது சாமியார் திடீரென பெவிக்குவிக்கை ஊற்றில், கத்தி கற்கள் கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.