தகாத உறவில் இருந்த ஆசிரியை - தெரு தெருவாக இழுத்துச் சென்ற கணவன்

Telangana Relationship Crime
By Sumathi Feb 23, 2023 04:15 AM GMT
Report

மனைவி தகாத உறவில் இருந்ததால் அவரை கணவன் தெரு தெருவாக இழுத்துச் சென்றுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள்

தெலங்கானாவைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் ராஜு. இவரது மனைவி மங்காப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியரான கே. நாகேந்திரபாபுவுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

தகாத உறவில் இருந்த ஆசிரியை - தெரு தெருவாக இழுத்துச் சென்ற கணவன் | Two Teachers Caught Illicit Relationship Telangana

இதனை அறிந்த கணவர் கண்டித்து தனது கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரித்தார். ஆனால், அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் மனைவி காதலனுடன் தனியாக இருப்பதை அறிந்த ராஜு மனைவியையும், காதலனையும்அவரது வீட்டில் இருந்தபோது பிடித்துள்ளார்.

தகாத உறவு

இருவரையும் வீட்டில் கட்டிவைத்து பின்னர் இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டி, கிராமத்தை சுற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அதனையடுத்து போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.