பீர் பிரியரா நீங்கள்? உஷார், மூளைக்கு ஆபத்தாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
பீர் குடிப்பதால் வரும் பின்விளைவுகள் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீர்
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஜர்னலில் 2022 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், யுனிடெட் கிங்டமின் பயோபாங்கில் சேமிக்கப்பட்ட 36,678 நோயாளிகளின் மூளை எம்ஆர்ஐ ஸ்கேன்களை பகுப்பாய்வு செய்தனர்.

ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை உட்கொள்ளும் பெண்களும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பானங்களை உட்கொள்ளும் ஆண்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
மூளைக்கு ஆபத்து
பகுப்பாய்வின்படி, தினசரி ஒரு யூனிட் ஆல்கஹால் (தோராயமாக அரை பீர்) மூளையின் வயதை சுமார் ஆறு மாதம் என்கிற அளவுக்கு முதிர்ச்சியடைய வைக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட யூனிட் ஆல்கஹால் உட்கொண்டவர்கள், மது அருந்துவதைத் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, 10 வருடத்திற்கு சமமான மூளை வயதை கொண்டுள்ளனர்.

குடிப்பழக்கத்தால், மூளையில் ஏற்படும் விளைவு அதிவேகமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மது மட்டும் மூளை செயல்பாடு குறைவதற்கு முக்கிய காரணம் அல்ல. ஐந்து நாட்களுக்கு மட்டுமே தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது மூளை இன்சுலின் அளவை பாதிக்கிறது.
பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும், அறிவாற்றலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய உணவுகளை குறுகிய காலம் உட்கொள்வது கூட அறிவாற்றலுக்கு தீங்கு விளைவிக்கும் நரம்பு அழற்சி செயல்முறைகளைத் தூண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...! IBC Tamil
ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசிய தளங்கள் : அரபு நாடுகளின் மீதான தாக்குதலின் பின்னணியில் யார்..! IBC Tamil