துருக்கியில் மலை உச்சியில் நின்று ஆபத்தான நிலையில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி

girl love boy
By Jon Feb 08, 2021 10:37 AM GMT
Report

துருக்கியில் காதல் ஜோடி ஆபத்தான முறையில் மலை உச்சியில் நின்றிருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் தரைப்பகுதிக்கும், குன்றுக்கும் இடையே சொற்ப இடைவெளியை பயன்படுத்தி போட்டோகிராபரின் நேர்த்தியால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மலை உச்சியில் நின்று பெண்ணின் கையை நபர் ஒருவர் பிடித்து தொங்கியவாறு நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உண்மையிலேயே எடுக்கப்பட்டதா, போட்டோஷாப் செய்யப்பட்டதா என விவாதம் எழுந்த நிலையில், சிறிய அளவிலான குன்றை மலை உச்சிபோல் சித்தரித்து, குன்றுக்கு கிழே இருக்கும் தரைப்பகுதி தெரியாதவாறு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.