சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - டிடிவி தினகரன்

Tamil nadu Government Of India TTV Dhinakaran
By Karthikraja Aug 26, 2024 04:30 PM GMT
Report

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன்

தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ttv dhinakaran

இந்த அறிக்கையில், "தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவிகிதம் வரை கட்டண உயர்வை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி

சாக கிடக்கும் நடிகர்கள் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா? ரஜினி பேச்சுக்கு துரை முருகன் பதிலடி

சுங்கச்சாவடி கட்டண உயர்வு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம்,சேலம் மாவட்டம் ஓமலூர் என 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வரவிருக்கும் புதிய நடைமுறையால் ஏற்கனவே வசூலிக்கப்படும் கட்டணத்தோடு, ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது. 

எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கசாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.