வேண்டாம்பா இது...!! குமுறும் TTF வாசனின் தாய் !! கண்ணீருடன் வைத்த வேண்டுகோள்!!!
TTF வாசன் தற்போது சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளிவந்துள்ள நிலையில், அவரின் தாய் இளைஞர்களுக்கு வேண்டுகோளை ஒன்றை வைத்துள்ளார்.
TTF வாசன்
பைக் சாகச வீடியோக்கள் வெளியிடுவதையே தனது வேலையாக கொண்டிருந்தவர் TTf வாசன். இவருடைய யூடியூப் பக்கத்தை பல ரசிகர்களும் பாலோ செய்வதே இவரின் சாகசத்தை பார்ப்பதற்காகவே.
இந்நிலையில், தான் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இவரை, பாலு ரெட்டி சாத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அம்மா வேண்டுகோள்
இதில் TTF வாசன் பல முறைகள் ஜாமீன் மனு தாக்கல் செய்து, நேற்று தான் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் வந்தார். வெளியில் வந்தவர் மீண்டும் தான் பைக் ஓட்டுவேன் என்று கூறினார்.
இதற்கிடையில், அவரின் தாய் இளைஞர்களுக்கு வேண்டுகோள் வைக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் அவர், குழந்தைகள் பெற்றோர்களை நீதிமன்றம், சிறைவாசலுக்கு கொண்டு வந்து விடாதீர்கள் என TTF வாசனின் தாய் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தனது நிலை வேறுயாருக்கும் வந்து விட கூடாது என்றும் அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.