2 வாரம்தான்.. உலகை உலுக்க காத்திருக்கும் பேரழிவு - புதிய பாபா வங்கா கணிப்பு!

Tsunami Japan Baba Vanga
By Sumathi Jun 18, 2025 07:22 AM GMT
Report

ஒரே மாதத்தில் மிகப் பெரிய பேரழிவு உலகைத் தாக்கும் என்று புதிய பாபா வாங்கா கணித்துள்ளார்.

ரியோ டாட்சுகி 

ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

baba vanga

அதன்படி, ஜூலை 5ம் தேதி ஒரு பேரழிவு ஏற்படும். ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் பிளவு ஏற்படும். சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என்று கணித்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் வெளியானதும் பலரும் தங்களின் ஜப்பான் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

ருத்ர தாண்டவமாடும் ஈரான்; சமாளிக்க முடியல - உலக நாடுகளிடம் கையேந்தும் இஸ்ரேல்

ருத்ர தாண்டவமாடும் ஈரான்; சமாளிக்க முடியல - உலக நாடுகளிடம் கையேந்தும் இஸ்ரேல்

பெரிய பூகம்பம்

முன்னதாக, கடந்த 2011ல் 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது Future I Saw காமிக் புத்தகத்தில் 2020ஆம் ஆம்டில் வைரஸ் தாக்குதல் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

Ryo Tatsuki

இதன்மூலம் கொரோனா குறித்தும், 1995ஆம் ஆண்டு நடந்த ஜப்பானின் கோபே நிலநடுக்கத்தையும் கணித்ததாக கூறப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதுதான் அவரது முதல் கணிப்பு என கூறப்படுகிறது.