55 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெளி உலக சந்திப்பு - அறியப்படாத மர்மம்!

Indonesia
By Sumathi Jun 14, 2025 07:10 AM GMT
Report

55,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகை சந்தித்த பழங்குடியினர் குறித்து பார்ப்போம்.

கொரோவாய்

இந்தோனேசியாவின் பப்புவா அடர்ந்த மழைக்காடுகளில் கொரோவாய் பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு சென்றடைவது மிகவும் கடினம். 1970-கள் வரை, இப்படியொரு பழங்குடி மக்கள் இருப்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.

korowai tribe

55,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகை சந்தித்த பழங்குடியினர் என அறியப்படுகிறார்கள். இவர்கள் மீன்களை வேட்டையாடுவதோடு, காட்டில் இருந்து சவ்வரிசி போன்ற உணவுப் பொருட்களைச் சேகரிக்கிறார்கள்.

8 நிமிடங்களில் இறந்து மீண்டும் உயிர் பெற்ற பெண் - அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

8 நிமிடங்களில் இறந்து மீண்டும் உயிர் பெற்ற பெண் - அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

அறியப்படாத மர்மம்

இவர்களின் மக்கள்தொகை 4,000 முதல் 4,400 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'மர வீடுகள்' கட்டுவதற்குப் பெயர் பெற்றவர்கள். தங்கள் முழு கிராமத்தையும் மரங்களின் மீது அமைத்துள்ளனர்.

55 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெளி உலக சந்திப்பு - அறியப்படாத மர்மம்! | Korowai Tribe Met Humans After 55000 Years

அவர்களின் வீடுகள் தரையில் இருந்து 10 முதல் 50 மீட்டர் உயரத்தில், வலுவான மரத் தண்டுகளால் தாங்கப்பட்டு, இலைகளால் மூடப்பட்டிருக்கும்.

பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கின்றனர். இதில் சில குழுக்கள் தற்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் மிஷனரிகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். "First Contact" மற்றும் "Human Planet" போன்ற ஆவணப் படங்களில் கொரோவாய்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.