பெண் எழுத்தாளரை டிரஸ்ஸிங் அறையில் தள்ளிவிட்டு சீரழித்த ட்ரம்ப் - நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்கா பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோல் (E Jean Carroll) நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
பெண் எழுத்தாளரிடம் அத்துமீறிய ட்ரம்ப்
அவர் ட்ரம்ப்-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனிலுள்ள பெர்க்டார்ப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்தேன்.
அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து ட்ரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.

பின்னர் டிரஸ்ஸிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.2019ல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தக்கத்தின் ஒரு பகுதியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தேன். அவரை பார்த்து பயந்துதான், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன்.
நீதிமன்றத்தில் சாட்சியம்
இதை வெளியே கூறாமல் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டேன்.அதற்காகதான் தற்போது உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறேன் அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார்.
அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது" எனச் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால், ட்ரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா, "ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவர் என்னைப் பற்றி அவதூறு பரப்பினார். அதனால் எனக்கென ஒரு காதல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது" எனச் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால், ட்ரம்ப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோ டகோபினா, "ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது இதுவரை சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.