பயமா அண்ணாமலை....இவ்ளோ நாள் தம்பி..இனி மறுபக்கத்தை பார்ப்பார்!! துரத்தும் திருச்சி சூர்யா

Tamil nadu BJP K. Annamalai Trichy Suriya Shiva
By Karthick Jun 24, 2024 06:18 AM GMT
Report

நேற்றைய தினம் திருச்சி சூர்யா தமிழிசையை சீண்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திருச்சி சூர்யா

திமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் திருச்சி சிவா'வின் மகனான திருச்சி சூர்யா தான் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்ததாக கூறினார்.

BJP flag

தேர்தல் முடிந்த பிறகு, தமிழிசை சற்று மாநில தலைமைக்கு எதிராக பேச, அண்ணாமலைக்கு ஆதரவாக நிற்கிறேன் என தமிழிசையை சாடி கருத்துக்களை வெளியிட்டார் திருச்சி சூர்யா. அதுவே அவருக்கு எதிராக மாறியது. கட்சியின் தலைமைக்கு எதிராக பேசினார் என கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் திருச்சி சூர்யா.

Trichy Surya Annamalai

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து அவர் எதிர்மறையான கருத்துக்களை தமிழிசை மற்றும் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்.

அக்கா ஊழல் பட்டியலோடு சந்திக்கிறேன் - தமிழிசையை சீண்டும் திருச்சி சூர்யா!

அக்கா ஊழல் பட்டியலோடு சந்திக்கிறேன் - தமிழிசையை சீண்டும் திருச்சி சூர்யா!

தம்பியின் மறுபக்கத்தை....

அப்படி அவர் ஒரு பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். அப்பதிவில்,

உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.   

Tamilisai Soundararajan Annamalai

 என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா? அண்ணாமலை

அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும்.அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே...எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.