இழுக்க பார்த்த அதிமுக..? முந்திக்கொண்ட அண்ணாமலை!! மீண்டும் களமிறங்கும் திருச்சி சூர்யா சிவா
அதிமுகவில் திருச்சி சூர்யா சிவா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருச்சி சூர்யா சிவா
தனது தந்தை மீதும் திமுக மீதும் கொண்ட அதிருப்தி காரணமாக, திருச்சி சூர்யா சிவா, தன்னை தமிழக பாஜகவில் இணைத்து கொண்டார். கட்சியில் இணைத்த சில காலத்திலேயே அண்ணாமலையின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வந்த அவர் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக பொதுவெளியில் நேரடியாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
கட்சியில் திருச்சி சூர்யா சிவாவிற்கு மாநில ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தான், சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவாவிற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் வெளியான டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா இருவரிடையேயான செல்போன் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மீண்டும் கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அண்ணாமலைக்கு செக் வைக்கும் முயற்சியா..?
தற்போது அண்ணாமலையிடம் ஏற்பட்ட மோதல் போக்கின் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அண்ணாமலை தான் இதற்கு காரணம் என அதிமுக வட்டாரம் ஆணித்தரமாக தெரிவித்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவில் இருந்து வெளிவந்த பிறகு எந்த கட்சியிலும் தற்போது தன்னை இணைத்து கொள்ளாமல் இருந்து வரும், திருச்சி சூர்யா சிவாவை அதிமுக தங்கள் பக்கம் இழுப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணாமலையின் செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவே அவரை கட்சியில் இணைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இரு தரப்பிடம் இருந்தும் எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முந்திக்கொண்ட அண்ணாமலை
இந்நிலையில், தற்போது தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சி சூர்யா சிவா கேட்டுக்கொண்டதை போல, அவர் அவருடைய பதவிகளிலேயே நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கை
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2023
திரு.சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய… pic.twitter.com/YT6rylJhtK
இது குறித்து திருச்சி சூர்யா சிவா என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது அதிகளவில் எழுந்துள்ளது.