அண்ணாமலையை காலி செய்யும் அசைன்மென்ட்...? திருச்சி சூர்யா சிவாவை இழுக்கும் அதிமுக.?

Tamil nadu BJP K. Annamalai Trichy Suriya Shiva
By Karthick Nov 01, 2023 12:03 PM GMT
Report

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக கருதப்பட்ட திருச்சி சூர்யா சிவா தற்போது அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

திருச்சி சூர்யா சிவா

தனது தந்தை மீதும் திமுக மீதும் கொண்ட அதிருப்தி காரணமாக, திருச்சி சூர்யா சிவா, தன்னை தமிழக பாஜகவில் இணைத்து கொண்டார். கட்சியில் இணைத்த சில காலத்திலேயே அண்ணாமலையின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வந்த அவர் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக பொதுவெளியில் நேரடியாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். 

trichy-suriya-siva-to-join-in-admk-to-counter-bjp

கட்சியில் திருச்சி சூர்யா சிவாவிற்கு மாநில ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தான், சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவாவிற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

பாசிச முகம் காட்டும் திமுக !! தமிழகமெங்கும் கைதான பாஜகவினர்!! கொந்தளித்த அண்ணாமலை!!

பாசிச முகம் காட்டும் திமுக !! தமிழகமெங்கும் கைதான பாஜகவினர்!! கொந்தளித்த அண்ணாமலை!!

அந்த சமயத்தில் வெளியான டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா இருவரிடையேயான செல்போன் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மீண்டும் கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த சூர்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  


அண்ணாமலைக்கு செக் வைக்கும் முயற்சியா..?

தற்போது அண்ணாமலையிடம் ஏற்பட்ட மோதல் போக்கின் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அண்ணாமலை தான் இதற்கு காரணம் என அதிமுக வட்டாரம் ஆணித்தரமாக தெரிவித்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

trichy-suriya-siva-to-join-in-admk-to-counter-bjp

 பாஜகவில் இருந்து வெளிவந்த பிறகு எந்த கட்சியிலும் தற்போது தன்னை இணைத்து கொள்ளாமல் இருந்து வரும், திருச்சி சூர்யா சிவாவை அதிமுக தங்கள் பக்கம் இழுப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணாமலையின் செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவே அவரை கட்சியில் இணைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இரு தரப்பிடம் இருந்தும் எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.