நண்பர் வீட்டு மாடியில் மாணவி; மறுப்பு தெரிவித்த காதலன் - இறுதியில் நடந்த சோகம்!

Tamil nadu Crime Death trichy
By Jiyath Apr 22, 2024 06:23 AM GMT
Report

கல்லூரி மாணவி ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவி தற்கொலை 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (19). இவர் கல்லூரி ஒன்றில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிஷோரின் நண்பர் வீட்டின் மாடியிலிருந்து ஜெயஸ்ரீ கீழே குதித்துள்ளார்.

நண்பர் வீட்டு மாடியில் மாணவி; மறுப்பு தெரிவித்த காதலன் - இறுதியில் நடந்த சோகம்! | Trichy College Students Suicide Boyfriend Arrested

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட கிஷோர், தனது நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மனைவியுடன் மட்டும் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காதலன் கைது 

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் கிஷேர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், ஜெயஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை கைது செய்தனர்.

நண்பர் வீட்டு மாடியில் மாணவி; மறுப்பு தெரிவித்த காதலன் - இறுதியில் நடந்த சோகம்! | Trichy College Students Suicide Boyfriend Arrested

மேலும், பள்ளிப் பருவத்திலிருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனே திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயஸ்ரீ வலியுறுத்தியுள்ளார். ஆனால் கிஷோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயஸ்ரீ திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என விசாரணையில் தெரியவந்துள்ளது.