காதல் விவகாரம்: கல்லூரி வாசலில் துடிதுடித்த இளம்பெண் - மாணவன் வெறிச்செயல்!

Karnataka India Crime Death
By Jiyath Apr 19, 2024 06:48 AM GMT
Report

காதலிக்க மறுத்த பெண்ணை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் விவகாரம் 

கர்நாடக மாநிலம் உப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்தவர் நேகா ஹிரேமட் (24). இந்த மாணவி அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்துள்ளார். அதே கல்லூரியை சேர்ந்த பயாஸ் (24) என்ற மாணவன், நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

காதல் விவகாரம்: கல்லூரி வாசலில் துடிதுடித்த இளம்பெண் - மாணவன் வெறிச்செயல்! | Neha Stabbed To Death By Fayaz In Karnataka

ஆனால், தனது காதலை பலமுறை அவரிடம் தெரிவித்தும், அதனை நேகா ஏற்கவில்லை என தெரிகிறது. மேலும், தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த பயாஸை நேகா கண்டித்துள்ளார்.

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு - ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!

குத்திக்கொலை 

இதனால் ஆத்திரத்தில் இருந்த பயாஸ் நேற்று கல்லூரிக்கு வெளியே நேகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், தலை, கழுத்து, மார்பில் பலத்த காயமடைந்த நேகா துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதல் விவகாரம்: கல்லூரி வாசலில் துடிதுடித்த இளம்பெண் - மாணவன் வெறிச்செயல்! | Neha Stabbed To Death By Fayaz In Karnataka

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த பயாஸை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.