நள்ளிரவில் உல்லாசத்திற்கு அழைத்த டிரைவர்.. மறுத்ததால் டார்ச்சர், அடித்தே கொன்ற திருநங்கை - அதிர்ச்சி!

Attempted Murder Death Salem
By Vinothini Sep 30, 2023 09:00 AM GMT
Report

திருநங்கை ஒருவரை டிரைவர் உல்லாசத்திற்கு அழைத்ததால் அவர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டார்ச்சர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அயோத்தியாப்பட்டணம் ராம் நகரைச் சேர்ந்த திருநங்கை நவ்யா என்பவர் இவர் கடந்த 10 ஆண்டுகளாக, அய்யாகவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

transgender-woman-killed-a-driver

இதில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது, சதீஸ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நேற்று இவர் குடித்துவிட்டு தனது நண்பருடன் அவரது வீட்டிற்கு சென்று பேசினார். பின்னர் அவரது நண்பரை அழைத்து சென்றுவிட்டு மீண்டும் தனியாக வந்தார் சதீஸ்குமார்.

கொலை

இந்நிலையில், அவர் நவ்யாவின் வீட்டு கதவை தட்டி வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா அருகில் இருந்த கட்டையை எடுத்து சதீஸ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபொழுது சதீஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

transgender-woman-killed-a-driver

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ்க்கு அழைத்தனர். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் சதீஸின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு நவ்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.