பெண்ணாக மாற முயன்ற திருநங்கை - ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடுமை!
பெண்ணாக மாற முயன்ற திருநங்கை துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பெண்ணாக மாற முயற்சி
தென்காசி, ஆலங்குளம் அருகே பரும்பு மாடி தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை மகாலட்சுமி. இவருடன் அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாக தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருநங்கை பலி
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரது மர்ம உறுப்பை மகாலட்சுமியும்,
மற்றொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் இறந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இருவரும் ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.