உல்லாசத்திற்கு அழைத்து அதிக பணம் கேட்ட திருநங்கை - கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுனர்

Attempted Murder Chennai Crime Transgender
By Sumathi Feb 27, 2023 10:27 AM GMT
Report

திருநங்கையை, லாரி ஓட்டுனர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

திருநங்கை

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருநங்கை சரவணன் என்ற சனா (27). இவர் கொலை செய்யப்பட்டு சாலையோரத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உல்லாசத்திற்கு அழைத்து அதிக பணம் கேட்ட திருநங்கை - கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுனர் | Transgender Murdered By Lorry Driver Chennai

தொடர்ந்து விசாரித்ததில், திருநங்கையின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கணேசன் (48) அவர் தான் சனாவை கொலை செய்த விவரம் தெரியவந்தது.

கொடூர கொலை

இவரது சொந்த ஊர் ராமநாதபுரம். இவர் லாரி டிரைவர். வேலைக்காக கணேசன் சென்னை வந்து சத்தியமூர்த்தி நகரில் தனிமையில் தங்கியுள்ளார். அப்போது கனரக வாகனங்கள் நிற்கும் இடத்தில், கணேசனை பாலியல் உறவில் ஈடுபட சனா அழைத்துள்ளார்.

அதன்பின், கூறிய தொகையை விட பல மடங்கு கேட்டு மிரட்டியதால், ஆத்திரமடைந்த கணேசன் சனாவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.