சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 6 பேர் பலி - என்ன நடந்தது?

Chhattisgarh Train Crash Accident Indian Railways Death
By Sumathi Nov 04, 2025 06:11 PM GMT
Report

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் விபத்து 

சத்தீஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

chhatisghar

இதன் காரணமாக பிலாஸ்பூர் – ஹவுரா வழித் தடத்தில் செல்லும் ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டபோது மேலே செல்லும் மின்சார வயர்களில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பேருந்து - லாரி மோதி கோர விபத்து; 17 பேர் பலி

அரசு பேருந்து - லாரி மோதி கோர விபத்து; 17 பேர் பலி

6 பேர் பலி

இதனை சரி செய்தால் மட்டுமே போக்குவரத்து சீரடையும் என்பதால் நிலைமை சீரடைய கூடுதல் நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 6 பேர் பலி - என்ன நடந்தது? | Train Accident Chhattisgarh 6 Passengers Died

20க்கும் அதிகமானோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும்,

படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.