நீட் தேர்வு விலக்கில் உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tamil nadu DMK Ma. Subramanian NEET
By Sumathi Aug 19, 2022 07:40 AM GMT
Report

நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1982-ம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.

நீட் தேர்வு விலக்கில் உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Tn Govt Is Determined To Exempt Neet M Subramanian

தற்போது 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது.இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 நீட் விலக்கு - உறுதி

இதனைத்தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். இங்கு ரூ.60கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப்பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும்

நீட் தேர்வு விலக்கில் உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Tn Govt Is Determined To Exempt Neet M Subramanian

மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு கிடையாது எனக் கூறினார்.