திருமணமானவர்களுக்கான போட்டி; இடம்பிடித்த தமிழக பெண் - யார் இவர்?
திருமணமானவர்களுக்கான அழகிப்போட்டியில் தமிழக பெண் பங்கேற்கவுள்ளார்.
அழகிப்போட்டி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் திருமதி உலக அழகி போட்டி நடைபெறுவது வழக்கம். இது, திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இந்தப்போட்டி ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 22 வரை நடைபெறவுள்ளது.
இதில், 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று சுற்றுகள் நடைபெறும். இந்தச் சுற்றின் இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.
தமிழக பெண்
கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World People's Choice Winner 2022 என்ற பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுவதற்காக தனித்தனியாக கடும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்.
இதுவரை நிறைய பட்டங்களையும், விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இவர், ஷ்ரேயாஸ் குளோபல் அகாடமி - ட்ரிவன் பிலிவ் ஃபவுட்னேஷன் மூலம் குழந்தைகளின் கல்விக்காக 8500 டாலர்கள் நிதி திரட்டி உள்ளார். குழந்தை கல்வியில் உதவி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளார்.