அழகிப்போட்டியில் அடிதடி... முடியை பிய்த்து அடித்துக் கொண்ட பெண்கள்!
மிஸ் இலங்கை அழகிப்போட்டிக்கு பின் சிலர் அடிதடியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ் இலங்கை
அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள ஸ்டேட்டன் தீவில் முதல் மிஸ் இலங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில், அழகிப்போட்டிக்கு பின்னர் நடந்த விருந்தில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், ஆண்கள், பெண்கள் உள்பட பலரும் அடிதடியில் ஈடுபடுவது வீடியோவில் காணமுடிகிறது.
வீடியோ வைரல்
இதனால், அங்கிருந்த பல பொருள்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சண்டைக்கான காரணங்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது. கைக்கலப்பில் ஈடுப்பட்டவர்களில் சிலர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Miss Sri Lanka New York after party - video 2 pic.twitter.com/sp94xPe4lK
— Under The Coconut Tree (@Toddy_Lad) October 23, 2022
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர்களின் தாயகமான இலங்கையின் நிவாரணத்திற்கு அளிக்க திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுஜானி பெர்னாண்டோ,
அழகிப்போட்டியில் பங்கேற்ற 14 போட்டியாளர்களில் எவரும் சண்டையில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார்.