மக்களவை தேர்தல்: திடீரென கொடைக்கானல் புறப்படும் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்?

M K Stalin Tamil nadu DMK Lok Sabha Election 2024
By Jiyath Apr 27, 2024 05:05 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தரவுள்ளார்.

கொடைக்கானல் 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மக்களவை தேர்தல்: திடீரென கொடைக்கானல் புறப்படும் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்? | Tn Cm Mk Stalin Kodikanal Visit

இந்நிலையில் தற்போது அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி; இது மிகவும் ஆபத்து- தமிழகத்தில் வழக்குப்பதிவு!

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி; இது மிகவும் ஆபத்து- தமிழகத்தில் வழக்குப்பதிவு!

மு.க.ஸ்டாலின் 

இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29-ம் தேதி ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தரவுள்ளார்.

மக்களவை தேர்தல்: திடீரென கொடைக்கானல் புறப்படும் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்? | Tn Cm Mk Stalin Kodikanal Visit

அவர் வரும் மே 4-ம் தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.