உலககோப்பை: இந்திய அணி தோல்வி - தாங்கமுடியாத இளைஞர் மாரடைப்பால் மரணம்!
இந்திய அணி தோல்வியை தாங்க முடியாத இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்திய அணி தோல்வி
திருப்பதி, துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார்.
இந்திய அணி வெற்றிபெறும் என பல ரசிகர்கள் உறுதியாக நம்பிய நிலையில் இவரும் ஆர்வத்துடன் இருந்துள்ளார். ஆனால், போட்டியில் இந்திய அணி நிலை மாற மாற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இளைஞர் மரணம்
தொடர்ந்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பதறிய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்ட குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்திய அணியின் தோல்வியை தாங்கி கொள்ள இயலாமல் இவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.