பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு.. இது கண்டிப்பா நடக்கும்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கருட சேவை :
கருட சேவை அல்லது கருட வாகன புறப்பாடு என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகும். வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவின் 5 ஆம் நாளில் இந்நிகழ்வு நடைபெறும். அப்போது கருடாழ்வார் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தனது இரு கரங்களில் தாங்கி வீதியுலா வருவார்.
திருப்பதி:
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.
அதன்படி பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
கருட சேவை சிறப்பு :
இதனை காண ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
மேலும் கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
