Friday, Jun 6, 2025

வயதைக் குறைக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் திடீர் கடிதம்!

Thol. Thirumavalavan Narendra Modi India
By Vidhya Senthil 7 months ago
Report

ஆயுஷ்மான் பாரத் பிரதான் திட்ட வயது வரம்பை 70-இல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திருமாவளவன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

திருமாவளவன்

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 10.4 கோடி பேர் 60 வயதைக் கடந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரியவந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.

thirumavalavan

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான இந்த சலுகையை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் விரிவு படுத்தினால் பரவலாகப் பலர் இதில் பயன் பெற முடியும். தற்போதைய திட்டத்தில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு உதவ முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி வேதனை

உங்களுக்கு உதவ முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி வேதனை

அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களைக் கருத்தில் கொண்டு இதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். மூத்த குடிமக்களின் மக்கள் தொகையில் 71% கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியும் குறைவாக உள்ளது.

பிரதமர் மோடி

இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மூத்த குடிமக்களிலேயே மாற்றுத்திறனாளிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

pm modi

தற்போதைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு 5177 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கெனக் குறிப்பான திட்டம் வகுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது