ஓடும் காரை வழி மறித்து கத்தி முனையில் வழிப்பறி செய்த திருடர்கள் - அதிரடியாக சுற்றி வளைத்து மாஸ் காட்டிய போலீசார்

Tamil Nadu Police
By Nandhini Jun 15, 2022 06:55 AM GMT
Report

காரை வழி மறித்து கத்தி முனையில் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் காரில் வழிப்பறி 

காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் தர்காமேடு பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் பிரகாஷ். இவர் காஞ்சிபுரம் நகரில் உள்ள டாட்டா ஷோரூமுக்கு வந்தார். பின்பு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளைசத்திரம் மார்க்கமாக சந்தவேலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

பிரகாஷின் கார் ராஜகுளம் அருகே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் திடீரென காரை வழிமறித்து முன் பக்க கண்ணாடி மற்றும் பின்பக்க கண்ணாடி மீது கருங்கற்களை வீசினார்கள்.

இதில், நிலைகுலைந்து போன பிரகாஷ் காரை நிறுத்தினார். இதன் பின்பு, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை எடுத்து பிரகாஷின் கழுத்தில் வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த 1200 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

ஓடும் காரை வழி மறித்து கத்தி முனையில் வழிப்பறி செய்த திருடர்கள் - அதிரடியாக சுற்றி வளைத்து மாஸ் காட்டிய போலீசார் | Thieves Arrest

குற்றவாளிகள் கைது

பயந்து போன பிரகாஷ் பின்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடனடியாக தப்பி ஓடிய மர்ம நபர்களை செல்போன் மேப் மூலம் தீவிரமாக தேடினார்கள். அவர்கள் 3 பேரும் சிறுவாக்கம் ஏரிக்கரை அருகே சென்றதை கண்டறிந்த போலுசார் அவர்கள் 3 பேரையும் ஏரிக்கரை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

கொலை குற்றவாளி ரவிசந்திரன், ருத்ரமூர்த்தி மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த ஒன்னரை மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை சுற்றிவளைத்து கைது செய்த போலீசாரை காஞ்சிபுரம் கோட்ட காவல் துணை தலைவர் எம்.சண்முகப்பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.