கட்டிப்பிடிய விட பெரிய ஆறுதல் ஏதும் இருக்கா - லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!
கட்டிப்பிடி வைத்தியம் மூலம் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
கட்டிப்பிடி
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நடாஷா விக்ஸ். இவர் பகுதிநேர வேலையாக கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து வருகிறார். இந்த தொழிலை 2014-ம் ஆண்டு தொடங்கி நாடு விட்டு நாடு சென்று வருகிறார்.
இவரது இந்த வைத்தியத்திற்கு எப்போதும் கூட்டம் அலைமோதுமாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என பல்வேறு தரப்பினரும் வருகை தருகின்றனர். பெல்ஜியம், அயர்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்தெல்லாம் சிகிச்சை பெற வருகிறார்கள்.
அசாதாரணமான தொழில்
ஒவ்வொரு அமர்வுக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 7,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார். அவரை தேடி வருபவர்கள் சோஃபாவில் அமர்ந்திருக்கும் போது, அங்கு ஒரு இதமான சூழலை உருவாக்குகிறார்.
எல்லாவற்றையும் குணமாக்கும் சக்தியோடு வெதுவெதுப்பான அணைப்பை தருகிறார்.
அன்போடும், அக்கறையோடும் அவர் தழுவும் போது, சிலர் தூங்கியும் விடுகிறார்களாம். இதன் மூலம் தூய்மையான அன்பை பரப்புவதோடு தேவைப்படுவோருக்கு ஆறுதலும் அளித்து வருவதாக கூறுகிறார்.