மீண்டும் மோடி தான் பிரதமர் - ஆனால் கூட்டணி பற்றி..? ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி
மீண்டும் மோடியை பிரதமராக்க என்ன வேண்டுமோ அதை செய்வோம் என தேனி எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரம்
ஓபிஎஸ் தரப்பு - பாஜக கூட்டணி உறுதியானதா..? என்ற தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணி குறித்த முடிவை எடுக்க முழு உரிமை ஓபிஎஸ்'ஸிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தங்கள் அணி இடம்பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வந்தாலும், தாமரை சின்னத்தில் நிற்குமாறு வலியுறுத்துவதாகவும், அதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு சற்று தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் மோடியை
இந்த பரபரப்பான சூழலில் தான் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதியான ரவீந்திரநாத் கூறும் பேசும் போது, 3-வது முறையாக மீண்டும் மோடியை பிரதமராக்க என்ன செய்யவேண்டுமோ அதனை தாங்கள் செய்வோம் என உறுதிபட தெரிவித்தார்.
மேலும், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்து சென்றார். மீண்டும் பாஜக கூட்டணி தான் என்பதை ஓபிஎஸ் தரப்பு அழுத்தமாக இதன் மூலம் பதிவிடுவதாகவே அரசியல் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.