இனி எப்படி கள்ளக்காதலியுடன் உல்லாசமா இருப்ப... மனைவி செஞ்ச கொடூர செயல்!

Tamil nadu Relationship Crime
By Sumathi Aug 17, 2022 05:55 AM GMT
Report

கணவன் வேறு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதை கண்டித்து மனைவி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தகாத உறவு 

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்(32). மனைவி பிரியா(30). இவர் பிரியாவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.

இனி எப்படி கள்ளக்காதலியுடன் உல்லாசமா இருப்ப... மனைவி செஞ்ச கொடூர செயல்! | The Wife Poured Boiling Hot Water On Her Husband

இவர்களுக்கு 2 வயதில் 1 மகனும், 1 வயதில் மகளும் உள்ளனர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ல தனியார் நிறுவனம் ஒன்றிம் பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் பணிபுரியும் பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலியுடன் உல்லாசம்

அதனைத் தொடர்ந்து, இருவரும் பலமுறை வெளியில் செல்வது, விடுமுறையை ஒன்றாக கழிப்பது என்று உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் தங்கராஜின் மனைவிக்கு இதுகுறித்து தெரியவந்து கணவரை கண்டித்துள்ளார்.

மேலும் மனவி பிரியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. ஆனால் கணவர் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்திருக்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார் பிரியா.

மனைவியின் கொடூர செயல் 

இந்நிலையில், தனது கள்ளக் காதலியை பார்த்துவிட்டு தங்கராஜ் இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, 1 மணிக்கு குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்து கணவரின் அந்தரங்க பகுதியில் ஊற்றி இருக்கிறார்.

இதனால் அலறி துடித்த தங்கராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதனையடுத்து, வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இதன் தகவல் அறிந்த காவல்துறையினர் மனைவி பிரியாவை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனி எப்படி.. 

அப்போது நடத்திய விசாரணையில், 2 குழந்தைகள் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார். சம்பாதிக்கின்ற பணத்தை எல்லாம் அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுகிறார்.

எனக்கும் குழந்தைகளுக்கும் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை.கேட்டாலும் அடி உதை தான். இதற்கு என்ன செய்வது என்று யோசித்து இப்படி செய்தேன். இனி அவரால் கள்ளக்காதலியுடன் உல்லாச உல்லாசமாக இருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.