நிலைமை படுமோசம்; 2 மடங்காக எகிறும் கொரோனா - எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!
கொரோனாவின் உருமாறிய புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவு வருகிறது.
ஜே.என்.1 வைரஸ்
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3742ஐ தொட்டுள்ளது. ஓமிக்ரான் வேரியண்டின் ஜேஎன்.1 திரிபு தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
எச்சரிக்கை
மேலும், கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு நபர்களும், ராஜஸ்தானில் ஒருவரும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து AIIMS முன்னாள் இயக்குநரும் மூத்த நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, இது படிப்படியாக வலிமை வாய்ந்த, அதிகம் பரவிய வேரியண்ட் கொரோனாவாக மாறுகிறது.
இது அதிக தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது, ஆனால் இதனால் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படுவது இல்லை. மக்கள் பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பாலான அறிகுறிகள் அதிகமாக உள்ளன.
காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண், மூக்கு மற்றும் உடல் வலிகள் போன்ற மேல் சுவாசக் குழாய்கள் என்று கோவிட்-19 புதிய மாறுபாடு Jn.1 வகையின் அறிகுறிகள் உள்ளன. மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.