நெப்போலியன் மகனை சொத்துக்காக தான் திருமணம் செய்கிறாரா? பிரபலத்தின் சர்ச்சை கருத்து!!

Napoleon Marriage
By Karthick Jul 23, 2024 07:08 AM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

நெப்போலியன்

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக அசத்தியுள்ளார். 2001ல் திமுகவில் இணைந்த இவர் பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

Actor Napolean family

பின், பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துறைத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மகன் திருமணம் அதில் மூத்தமகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது.

திருமண நிச்சயம்

எனவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலானார். இரண்டாவது மகன் குணால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்தார்.

Actor Napolean son engagement

தனுஷிற்கு தற்போது திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என்றும் அவரின் பெயர் அக்ஷயா என்பதும் தெரியவந்துள்ளது.

வீடியோ காலில் தனுஷ் அமெரிக்காவில் இருந்து கலந்து கொள்ள, இங்கு நிச்சயதார்த்த நிகழ்வில் நெப்போலியன் தம்பதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

சொத்துக்காக...

இந்த திருமணம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் அளித்துள்ள பேட்டி சர்ச்சைக்குரியதாக உள்ளது. அவர் அளித்திருக்கும் பேட்டியில், அக்‌ஷயா மனைவி என்ற ஸ்தானத்தில் நெப்போலியன் மகனுக்கு இருக்க முடியாது,

வீடியோ காலில் அமெரிக்காவில் மாப்பிள்ளை - திருநெல்வேலியில் பொண்ணு!! நெப்போலியன் மருமகள் இவரே

வீடியோ காலில் அமெரிக்காவில் மாப்பிள்ளை - திருநெல்வேலியில் பொண்ணு!! நெப்போலியன் மருமகள் இவரே

ஒரு செவிலியராகத்தான் இருப்பார் என்கிறார். மேலும், திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சட்டப்படி செல்லாது என்ற காரணத்தால் தான் திருமணத்தை ஜப்பானில் நடத்துகிறார்கள் என்றும் அவர் பேசினார். தனுஷை, அக்‌ஷயா பணிப்பெண்ணாக பார்த்துக்கொள்வார்,

Actor Napolean son and daughter in law

ஆகையால் தனுஷின் முழு சொத்தும் அவருக்கு பிறகு அக்ஷயாவிற்கு என்றால் தான் என்றெல்லாம் பேசி திருமணத்திற்கு ஓகே சொல்ல வைத்து இருப்பார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார். இந்த பேட்டி சமூகவலைத்தளத்தில் பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது. திருமணம் பந்தம் இரு குடும்பம் இரு தனிநபர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், அது குறித்து மற்றொருவர் இவ்வாறு பேசியதை பலரும் எதிர்க்கிறார்கள்.