3 வாரமாக சுயநினைவு திரும்பவில்லை - இளவரசி கவலைக்கிடம்!

Thailand
By Sumathi Jan 11, 2023 06:56 AM GMT
Report

தாய்லாந்து நாட்டின் இளவரசிக்கு 3 வாரங்களாக சுயநினைவு திரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி பஜ்ரகித்தியபா

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ம் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார்.

3 வாரமாக சுயநினைவு திரும்பவில்லை - இளவரசி கவலைக்கிடம்! | Thai Princess Still Unconscious 3 Weeks

இதனையடுத்து உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இளவரசி பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 உடல் நிலை மோசம்

இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு 3 வாரங்களாகியும் சுயநினைவு திரும்பவில்லை என்றும்,

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைவாக உள்ள காரணத்தால் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.