102 வயதில் தடகளப் போட்டியில் அசத்திய தாய்லாந்து நபர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தடகளப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த 102 வயதான நபர் ஒருவர் தங்கப் பதக்கத்தை வென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தில் முதியவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான முதியவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை காட்டி அசத்தினர்.
குறிப்பாக 102 வயதான சவாங்க் என்பவர் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது அனைவரையும் வியக்கவைத்தது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதன் மூலம் தனது உடல் மேலும் வலிமையடைவதாகவும் சவாங்க் தெரிவித்துள்ளது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.