டெஸ்ட் போட்டிகளில் இது தான் மிகச்சிறந்த போட்டி - சுந்தர் பிச்சை

test australia gabba
By Jon Jan 19, 2021 05:56 PM GMT
Report

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வைத்து டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றிப்பெற்று தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது.

இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இண்டையா அணியும் வெற்றிபெற்றன. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி2-வது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த வெற்றியைக் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை கூறுகையில்,"டெஸ்ட் போட்டிகளில் இந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டி. மேலும் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத சூழலில் இளம் வீரர்களைக் கொண்டு வரலாற்று வெற்றிகண்ட இந்தியா அணைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.