12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. பல ஆபாச செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்!
பாடம் எடுக்கும் ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
அமெரிக்காவில் டென்னிசி மாநிலம், டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் சார்ஜர் அகாடமி என்ற தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 4ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக 38 வயதான அலிஸா மெக்காமன் பணியாற்றினார். இவர் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
இவரிடம் படித்த முன்னாள் மாணவன் தற்பொழுது 12 வயது சிறுவனுக்கு தனது வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இவர் பல மாணவர்களிடம் தகாத முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூற்றப்படுகிறது.
இது குறித்து தெரியவந்ததும், அந்த சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர், அப்பொழுது இவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த போலீசார் ஆசிரியர் மீது வைத்த குற்றச்சாட்டு உண்மை என்று அவரை கைது செய்தனர். மேலும்,பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அதன்ப்பிறகு, அவர் பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர். பின்னர், சுமார் ரூ.20 லட்சம் பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.