கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின் உருக்கமான டுவிட்!

covid india cricket sachin
By Jon Apr 08, 2021 04:54 PM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பிடியில் சிக்கியவர்களை ஏழை, பணக்காரர் என்ற பாகுபடில்லாமல் தும்சம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு இன்று வீடு திரும்பியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து, லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.  

ஏப்ரல் 2ம் தேதி, 2011ம் நடந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிபெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தன் சக வீரர்களுக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார் சச்சின். அந்த ட்வீட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அதில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என்னை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொண்டவர்கள் மற்றும் ஓய்வின்றி உழைக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என பதிவு செய்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சச்சின் வீடு திரும்பி உள்ளார். மருத்துவர்கள் அவரை சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.