கொரோனா பாதித்த சச்சின் மருத்துவமனையில் அனுமதி

cricket sanga pant tendulkar
By Jon Apr 02, 2021 11:13 AM GMT
Report

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மார்ச் 26ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சச்சின் தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பதிவில் உறுதிபடுத்திய சச்சின், "உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.