10 வருஷமா குழந்தை இல்லை.. பரிகாரத்திற்கு வந்த பெண்ணுக்கு பூசாரி செய்த காரியம் - கதறும் கணவன்!

Attempted Murder Crime Death
By Vinothini Nov 19, 2023 07:32 AM GMT
Report

பரிகாரத்திற்காக வந்த பெண்ணுக்கு பூசாரி செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லை

சேலம் மாவட்டம், சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 38 வயதான பசவராஜ், இவரது மனைவி 28 வயதான செல்வி. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

temple-priest-killed-women-in-salem

இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை, இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்தும், பல கோவில்களில் பரிகாரம் செய்தும் குழந்தை இல்லை. கடந்த 15-ம் தேதி காலை செல்வி திடீரென மாயமானார்.

மனைவியை காணவில்லை என தாரமங்கலம் போலீசில் பசவராஜ் புகார் கொடுத்தார். அப்பொழுது, திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் காட்டுப்பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஷேர் ஆட்டோவில் சில்மிஷம்.. நடுரோட்டில் டிரைவரை செருப்பால் தாக்கி புரட்டி எடுத்த பெண்!

ஷேர் ஆட்டோவில் சில்மிஷம்.. நடுரோட்டில் டிரைவரை செருப்பால் தாக்கி புரட்டி எடுத்த பெண்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், போலீசார் விசாரணையில், செல்வி கடந்த 3 வருடமாக பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த பூசாரி குமாருடன் பழகி வந்துள்ளார். இருவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. அதனால் பூசாரி இவருக்கு 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

temple-priest-killed-women-in-salem

பின்னர், செல்விக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதும் பூசாரி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதன்பிறகு சமீபத்தில் செல்வி கோவிலுக்கு சென்றபோது அந்த பூசாரி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

அதனை குடித்த செல்வி அங்கேயே சுருண்டு உயிரிழந்தார், பின்னர், அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி செயினை எடுத்து சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.