பூசாரியுடன் உல்லாசம்.. பார்த்து பதறிய கள்ளக்காதலன், ஆத்திரத்தில் அடித்து கொலை - அதிர்ச்சி சம்பவம்!

Attempted Murder Crime Death
By Vinothini Oct 26, 2023 10:37 AM GMT
Report

பெண் ஒருவர் பூசாரியுடன் உறவில் இருந்தபொழுது பார்த்த கள்ளக்காதலன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூசாரி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து 44 வயதான இவர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 18 வயதில் ஒரு மகளும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளார். இவர் ஆயுதபூஜையையொட்டி கோவிலில் பூஜை செய்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

priest dead of illegal affair

பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை, அவர் மாதா கோயில் பகுதியில் உள்ள கோவில் மேடில் ரத்த வெள்ளத்துடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பேரன் வயசு.. 10-ம் வகுப்பு சிறுவனை கட்டாயப்படுத்தி சீரழித்த 55 வயது பெண் - கொடுமை!

பேரன் வயசு.. 10-ம் வகுப்பு சிறுவனை கட்டாயப்படுத்தி சீரழித்த 55 வயது பெண் - கொடுமை!

விசாரணையில் அம்பலம்

இந்நிலையில், தகவலறிந்து வந்த போலீசர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மனைவி தனலட்சுமி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துள்ளார். அவர் 40 வயதான உதயகுமாருடன் திருமணம் செய்யாமல் குழந்தைகளுடன் கோத்தகிரியில் மாதா கோயில் அருகே வாழ்ந்து வருகிறார்.

arrest

இவருக்கும் பூசாரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது, அந்த பூசாரி வீட்டில் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு இந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். வெளியே சென்ற உதயகுமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரத்தில் உதயகுமார் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் வீட்டு வாசலில் உடலை போட்டுவிட்டு அதிகாலை இருவரும் அங்கிருந்து தப்பினர். மேலும், போலீசார் தலைமறைவாக இருந்த உதயகுமார் மற்றும் தனலட்சுமியை கைது செய்தனர்.