கோவில் கும்பாபிஷேகம் தடுத்து நிறுத்தம் - கிராம மக்கள் 7 பேர் தற்கொலை முயற்சி..!
தர்மபுரி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தியதால் மனமுடைந்த 7 பேர் விஷம் கலந்த பாயாசத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
7 பேர் தற்கொலை முயற்சி
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக அவர்கள் 7 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன், பாப்பிரெட்டிட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.