வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி செய்திகள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கலாம்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

protest farmer delhi
By Jon Jan 29, 2021 03:47 PM GMT
Report

வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி தொலைக்காட்சி செய்தி, நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கலாம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டெல்லியில் 'தப்லீக் ஜமாத்' மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற வெளிநாடுகளை சேர்ந்த மதப் பிரச்சாரகர்கள் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நேரத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாக தொலைக்காட்சிகளில் எதிர்மறையான செய்திகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகள், நிகழ்ச்சிகள் நடுநிலையாக இருப்பது கிடையாது. ஆனால் சில நேரங்களில் தொலைக்காட்சி செய்திகள், நிகழ்ச்சிகளால் வன்முறை உருவாகின்றன. பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் உள்ளது.

ஒரு சமுதாயத்துக்கு எதிராக மற்றொரு சமுதாயத்தை தூண்டிவிடும் செய்திகள், நிகழ்ச்சிகள் தொடர்பாக மத்திய அரசு கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி செய்திகள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கலாம்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் | Television News Programme High Court

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டபோது இணைய சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் வன்முறையை தூண்டும் வகையில் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள், நிகழ்ச்சிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது சட்டம், ஒழுங்கு பிரச்சினை. வன்முறை உருவாவதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்துவது நல்லது.

சாலைகளில் தடுப்புகளை அமைப்பது, போலீஸ்காரர்கள் கையில் லத்தியை கொடுப்பதைவிட வன்முறையை தூண்டும் செய்திகள், நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது சிறந்தது என்றார்.