Telegram நிறுவனர் அதிரடி கைது - என்ன காரணம்?

France Social Media
By Karthikraja Aug 25, 2024 03:34 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம்

டெலிகிராம்(Telegram) செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் போல் இந்த செயலியில் அழைப்பு மேற்கோள்வது, குறுஞ்செய்தி படங்கள், வீடியோ அனுப்புவது, குரூப் சாட் என சகல வசதிகளும் உண்டு. 

telegram app ceo arrest

இந்த செயலி 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ்(Pavel Durov)என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் துபாயில் உள்ளது. பாவெல் துரோவ், துபாய் மற்றும் பிரான்ஸில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளார். 

இனி Whatsapp ல் செய்தி அனுப்ப நம்பர் தேவை இல்லை - வெளியாக உள்ள அசத்தல் அப்டேட்

இனி Whatsapp ல் செய்தி அனுப்ப நம்பர் தேவை இல்லை - வெளியாக உள்ள அசத்தல் அப்டேட்

குற்றச் செயல்

இந்நிலையில், அஜெர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

telegram ceo Pavel Durov

ஏற்கனவே டெலிகிராம் செயலில் நடைபெறும், தீவிரவாத இயக்கங்களுக்கு துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.