ரொம்ப நல்ல பேங்க்; என் கைரேகை கூட இருக்காது - லெட்டர் எழுதி வைத்த திருடன்!

Telangana
By Sumathi Sep 04, 2023 04:40 AM GMT
Report

பேங்குக்கு திருடன் லெட்டர் எழுதி வைத்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

 நல்ல பேங்க்

தெலங்கானா, மஞ்சேரியலில் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, முகமூடி அணிந்த அந்த திருடன் நென்னல் மண்டல் தலைமையகத்தில் உள்ள அரசு நடத்தும் கிராமப்புற வங்கிக் கிளையின் பிரதான கதவின் பூட்டை உடைத்து நுழைந்துள்ளார்.

ரொம்ப நல்ல பேங்க்; என் கைரேகை கூட இருக்காது - லெட்டர் எழுதி வைத்த திருடன்! | Telangana Thief Leaves A Letter To Bank

தொடர்ந்து, காசாளர் மற்றும் குமாஸ்தாக்களின் அறைகளை உடைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் நாணயமோ அல்லது மதிப்புமிக்க பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை என்பதால் லாக்கரை திறக்காமல் விட்டுள்ளார்.

திருடன் கடிதம்

அதன்பின், ஒரு செய்திக்குறிப்பை விட்டுச்சென்றுள்ளார். அதில், ‘என்னால் இங்கு ஒரு ரூபாய்கூட எடுக்கமுடியவில்லை… அதனால் என்னைப் பிடிக்காதீர்கள். என் கைரேகைகள் எங்கும் இருக்காது. இது ஒரு நல்ல வங்கி’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நாள் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கவனித்த வங்கி அதிகாரிகள், போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வங்கி குடியிருப்பில் இருந்து செயல்படுவதால் பாதுகாப்பிற்கு காவலர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.