தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - திடீரென சோதனை நடத்திய தெலுங்கானா அதிகாரிகள்!

M K Stalin Tamil nadu Telangana
By Vinothini Aug 31, 2023 04:41 AM GMT
Report

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தெலுங்கானா அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

காலை உணவு திட்டம்

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இது கடந்த 25ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

telangana-officials-surveyed-cm-breakfast-scheme

இதில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயணடைகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை சோதனை செய்வதற்காக தெலுங்கானா முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.

telangana-officials-surveyed-cm-breakfast-scheme

சென்னை ராயபுரம் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாற்றப்படுவதை சோதனை செய்து வருகின்றனர்.