தேர்தலில் சீட் இல்லையா?விழுந்து புரண்டு கதறி அழுத முன்னாள் துணை முதல்வர் - ஷாக் வீடியோ!
சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் துணை முதல்வர் கதறி அழுத சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
சட்டமன்றத் தேர்தல்
தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, பி.ஆர்.எஸ் சார்பில்
யார் யார் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார்கள் என்று 115 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சீட் மறுக்கப்பட்ட நபர்களில் முன்னாள் துணை முதல்வரும், கான்பூர் (நிலையம்) தொகுதி எம்.எல்.ஏ-வுமான தட்டிகொண்ட ராஜய்யாவும் ஒருவர்.
சீட் மறுப்பு
வரும் சட்டமன்றத் தேர்தலில், தட்டிகொண்ட ராஜய்யா எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதியில், கட்சியின் மூத்த தலைவரான கடியம் ஸ்ரீஹரியை வேட்பாளராக நிறுத்த சந்திரசேகர ராவ் முடிவுசெய்திருக்கிறார்.
#WATCH | Jangaon, Telangana: Bharat Rashtra Samithi (BRS) leader Thatikonda Rajaiah, broke down reportedly after being denied a ticket from Station Ghanpur constituency for the upcoming Assembly elections. (22.08)
— ANI (@ANI) August 23, 2023
(Viral video) pic.twitter.com/4KXtqG15LT
இந்நிலையில், கட்சியில் தனக்கு சீட் மறுக்கப்பட்டதன் காரணமாக, ஜங்கவுனில் தன் ஆதரவாளர்கள் முன்பு கீழே விழுந்து அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவிவருகிறது.
அதில், `ஜெய் ராஜய்யா, ஜெய் தெலங்கானா' எனக் கோஷமிட்டபோது உணர்ச்சிவசப்பட்டு, அவர்கள் முன்பு கீழே விழுந்து கண்ணீர்விட்டார்.