மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்த சோக சம்பவம் - கதறி அழுத நண்பர்கள்!

Madurai Death Marathon
By Jiyath Jul 23, 2023 04:28 PM GMT
Report

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாரத்தான் போட்டி

மதுரையில் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்த சோக சம்பவம் - கதறி அழுத நண்பர்கள்! | Student Marathon Died Suddenly A Heart Attack Ibc

இந்த போட்டியில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மற்றும் எஞ்சினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்த 4500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட தினேஷ்குமார் என்ற மாணவன் போட்டி முடிந்த பின் விடுதிக்கு சென்றுள்ளார்.அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

உயிரிழப்பு

இந்நிலையில் அவரது நண்பர்கள் தினேஷ்குமாரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சுயநினைவை இழந்த தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அவரின் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.