விரிசலில் இந்தியா கூட்டணி - தயாநிதி மாறனின் கருத்து - தேஜஸ்வி யாதவ் கண்டனம்..?
திமுக எம்பி தயாநிதி மாறன் முன்னர் பேசிய வீடியோ ஒன்றால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழதுவங்கியுள்ளன.
தயாநிதி மாறன் கருத்து
திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியிருக்கின்றார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூகவலைத்தளத்தில் பரவ, சர்ச்சையாக வெடித்துள்ளது. "இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்களும் சிலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் கண்டனம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசும் போது, தேஜஸ்வி யாதவ் கண்டனம் திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள் உ.பி, பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது.
நாங்கள் அதை ஏற்க முடியாது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை நாடு முழுவதும் இருக்கிறது. அப்படியான நிலையில் உ.பி, பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம்.
இத்தகைய கருத்துகளை தெரிவிக்காமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும். பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிக்கிறோம்.
ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.