கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

Tamil nadu Chennai Death
By Jiyath Apr 24, 2024 04:19 AM GMT
Report

கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஆணவக் கொலை 

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்! | Teen Girl Commits Suicide After Writing A Letter

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு ஷர்மிளாவின் வீட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24- ம் தேதி பிரவீன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஷர்மிளாவின் சகோதரரான தினேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், தனது கணவரை ஆணவ படுகொலை செய்ய காரணமான, தனது பெற்றோர் மற்றும் இன்னொரு சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என ஷர்மிளா கூறிவந்தார்.

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

பிறந்த நாள் கேக் சாப்பிட்டு பலியான 10 வயது சிறுமி - வெளியான அதிர்ச்சி காரணம்!

சிக்கிய கடிதம் 

மேலும், அவர் மிக மனவேதனையிலும் இருந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 14-ம் தேதி ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரது மாமனார், மாமியார் ஷர்மிளாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்! | Teen Girl Commits Suicide After Writing A Letter

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஷர்மிளா உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஷர்மிளாவின் வீட்டில் இருந்து டைரி ஒன்றை கைப்பற்றினர். அதில் இறப்பதற்கு முன் ஷர்மிளா எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் "என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான். பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்" என எழுதப்பட்டிருந்தது.