ஹிஜாப் சரியாக அணியவில்லை - 14 மாணவிகளின் பாதி தலையை மொட்டை அடித்த ஆசிரியர்!
பள்ளி மாணவிகள் 14 பேரின் பாதி தலையை ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப்
இந்தோனேசியா, ஈஸ்ட் ஜாவாவில் உள்ள லாமொங்கன் என்ற ஊரில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல்
முன் தலையில் முடி தெரியும்படி பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர்களை தண்டிக்கும் வகையில், 14 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் ஒருவர் பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் மாணவிகள் மணமுடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் தவறு செய்த ஆசிரியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.